farmer leader

மத்திய அரசின்வேளாண் சட்டங்களுக்கு எதிராகவிவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே ஏழு கட்டப் பேச்சுவார்த்தைகளில், வேளாண் சட்டமசோதா தொடர்பாக எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

Advertisment

இந்தநிலையில், விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும்இடையேயான எட்டாம்கட்டப் பேச்சுவார்த்தை, இன்று நடைபெற்றது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையும், உடன்பாடு எதுவும்எட்டப்படாமல் தோல்வியில்முடிந்தது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசியவிவசாயச் சங்கத்தினர், பேச்சுவார்த்தையின்போது சூடான விவாதம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதுகுறித்து பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டஅகில இந்திய கிசான் சபாவின் பொதுச் செயலாளர் ஹன்னன் மொல்லா, "சூடான விவாதம் நடந்தது. வேளாண் சட்டங்களை ரத்து செய்வதைத் தவிர வேறு எதையும்விரும்பவில்லை என்று நாங்கள் கூறினோம். நாங்கள் எந்த நீதிமன்றத்திற்கும் செல்லமாட்டோம். வேளாண்சட்டங்கள்ரத்து செய்யப்படும்அல்லது நாங்கள் தொடர்ந்து போராடுவோம். ஜனவரி 26 ஆம் தேதி எங்கள் அணிவகுப்பு திட்டமிட்டபடி நடைபெறும்"எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் விவசாயிகள், 'நாங்கள் வெல்வோம்இல்லையென்றால் இறப்போம்' எனஎழுதப்பட்ட வாசகங்களோடு பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. விவசாயிகளுடனான அடுத்தகட்டபேச்சுவார்த்தை ஜனவரி15 ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisment