ADVERTISEMENT

"புதுச்சேரியில் ஜனவரி 4- ஆம் தேதி பள்ளிகள் திறப்பு"- அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு!

12:37 PM Dec 16, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

"புதுச்சேரியில் ஜனவரி 4- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்" என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், "புதுச்சேரியில் ஜனவரி 4- ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளும் திறக்கப்படும். அனைத்து வகுப்புகளும் ஜனவரி 4- ஆம் தேதியிலிருந்து காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை செயல்படும். அரை நாள் மட்டும் செயல்படும் பள்ளிகளுக்கு விருப்பப்படும் மாணவர்கள் வரலாம். புதுச்சேரியில் ஜனவரி 18- ஆம் தேதி முதல் முழுமையாகப் பள்ளிகளைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கல்லூரிகளைத் திறப்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்து அறிவிக்கப்படும்." என்றார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சருடன் கல்வித்துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT