Skip to main content

"கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்படும்" - புதுவை அமைச்சர் பேட்டி!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

puducherry college and university final year exam minister press meet


புதுச்சேரி கல்வித்துறை சார்பாக 2019- 2020 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் நடத்துவது குறித்தும், 2020-2021 ஆம் ஆண்டு கல்வி செயல் திட்டம் தொடர்பாகவும் கலந்தாய்வு கூட்டம் புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள உயர்கல்வித்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், கல்வித்துறை செயலர் அன்பரசு, உயர்கல்வித்துறை இயக்குனர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி மற்றும் பல்வேறு அரசுக் கல்லூரி முதல்வர்கள் கலந்துகொண்டனர். இதில் காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்திய அரசு கல்லூரி முதல்வர்கள் காணொளி காட்சி மூலம் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
 


அதனைத் தொடர்ந்து கல்வித்துறை  அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் அரசுத்துறை செயலாளர் அன்பரசு ஆகியோர் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தனர். அப்போது அவர்கள், "பல்கலை மானியக் குழு பரிந்துரையின் பேரில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் இறுதியாண்டு தேர்வு மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஜூலை மாதம் முதல் வாரம் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்குத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தாமல், அவர்கள் கடந்த செமஸ்டர்களின் தேர்ச்சி அடிப்படையில் அடுத்த ஆண்டு வகுப்புக்குச் செல்வார்கள். ஆகஸ்டு 01- ஆம் தேதி முதல் மாணவர்கள் கல்லூரிக்கு வருவது குறித்து அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது"  என்று தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.