ADVERTISEMENT
ADVERTISEMENT
பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. பிரக்யா தாகூர். இவர், மலேகான் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும், தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருபவர். இவர் மத்தியப் பிரதேசத்தின் போபால் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ளார்.
இவருக்கு, இன்று திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் சிகிச்சைக்காக, மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து மும்பைக்குத் தனி விமானத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரக்யா தாகூர் ஏற்கனவே கடந்த மாதம், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக அப்போது செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
Show comments