ADVERTISEMENT

7 பாதுகாப்பு நிறுவனங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி! 

08:05 AM Oct 15, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

7 புதிய பாதுகாப்பு நிறுவனங்களை இன்று காணொலிக் காட்சி மூலமாக நாட்டுக்கு அர்ப்பணிக்க இருக்கிறார் பிரதமர் மோடி. விஜயதசமி நாளான இன்று மதியம் 12.10 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அரசுத் துறையில் இருக்கும் ஆயுத தொழிற்சாலை வாரியத்தை 100% அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களாக மாற்றம் செய்யப்படுவது மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பில் இந்தியாவின் தற்சார்பு நிலையை மேம்படுத்தப் பாதுகாப்பு அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் பேச இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முனிஷன்ஸ் இந்தியா லிமிடெட், ஆர்மர்ட் வெஹிகிள்ஸ், நிகம் லிமிட்டெட் ஆகியவை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. அதேபோல் அட்வான்ஸ் வேப்பன்ஸ்-எகியுப்மன்ட் இந்தியா, ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ், யந்ரா இந்தியா, இந்தியா ஆப்டேல் லிமிடெட் நிறுவனமும், கிளைடர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தையும் நாட்டுக்காக அர்ப்பணிக்க இருக்கிறார் பிரதமர் மோடி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT