கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
74 வயதான ப.சிதம்பரம் சிறையில் குடல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே 4 முறை சிறையிலிருந்தவாறே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்த ப.சிதம்பரம், உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சிபிஐ வழக்கில் ஏற்கனவே கடந்த 22 ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம் தற்போது சிறையில் .உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Show comments