கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் குடல் அழற்சி நோயால் 7.5 கிலோ உடல் எடை குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
74 வயதான ப.சிதம்பரம் இதுவரை 4 முறை சிறையிலிருந்தவாறே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில், குடல் அழற்சியால் கடந்த 2 மாதத்தில் சுமார் 7.5 கிலோ வரை அவரது உடல் எடை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறைக்குச் செல்லும்போது 73.5 கிலோ இருந்த சிதம்பரம், தற்போது 66 கிலோ எடையுடன் மிகவும் உடல் நலிவுற்று பலவீனமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு குடல் அழற்சி நோயால் வாய் முதல் குடல் வரை கடுமையான புண், வயிறு வலி, எடை குறைதல் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டு தொடர் பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.