ADVERTISEMENT

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து!

05:15 PM Dec 15, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க, சிறிய குளிர்கால கூட்டத்தொடரைக் கூட்டவேண்டும் எனக் கடிதம் மூலமாகக் கோரிக்கை விடுத்தது பிரஹலாத் ஜோஷிக்கு கடிதம் எழுதியிருந்தார்.


இதற்குப் பதிலளித்துள்ள நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இந்தமுறை நடத்தப்படாது என்றும், அதற்குப் பதிலாக அரசு பட்ஜெட் தொடரை முன்கூட்டியே நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.


குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது பற்றி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களிடம் விவாதித்ததாகவும், அவர்கள் குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்யவே ஆதரவாக இருந்ததாகவும் கூறியுள்ள பிரஹலாத் ஜோஷி, கரோனா பரவல் காரணமாகவே, இக்குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT