ADVERTISEMENT

25 வயதில் ரூ.7,500 கோடி சொத்து... அசத்தும் இந்திய இளைஞர்...

11:01 AM Sep 27, 2019 | kirubahar@nakk…

iifl மற்றும் ஹுருன் நிறுவனம் ஒன்றிணைந்து 2019 ஆண்டிற்கான இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த பட்டியலின்படி இந்தியாவில் ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்களின் எண்ணிக்கை 953 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் என்ற இந்த பட்டியலில் ரூ.3.8 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். இதில் இந்தியாவின் மிகப்பெரிய இளம் கோடீஸ்வரர் என்ற பெயரை ஓயோ ரூம்ஸ்-ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான 25 வயதே ஆன ரிதேஷ் அகர்வால் பிடித்துள்ளார். இவரது சொத்துமதிப்பு ரூ.7,500 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

தனது 13 வயதில் சிம் கார்ட் விற்பனை செய்து சம்பாதிக்க ஆரம்பித்தவர், பின்னர் தனது கல்லூரி படிப்பை முடிக்க முடியாமல் பாதியில் கைவிட்டார். அதன்பின் அவர் ஆரம்பித்த ஓயோ ரூம்ஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் பலனாக இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தனது 25 ஆவது வயதிலேயே அவர் இடம்பிடித்திருக்கிறார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT