ADVERTISEMENT

வங்கி ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு...!

10:55 AM Dec 24, 2018 | tarivazhagan

விஜயா வங்கி, தேனா வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளை ஒன்றாக இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 9 வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு வரும் 26-ம் தேதி வேலை நிறுத்ததை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஊதிய உயர்வு, வங்கிகள் இணைப்பைக் கைவிடுதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் கடந்த 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வங்கிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதன்பின் 22-ம் தேதி மாதத்தின் 4-வது சனிக்கிழமை என்பதால் பொது விடுமுறையானது. மேலும் 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறையானது. இவையெல்லாம் முடிந்து இன்று வங்கிகள் திறக்கப்பட்ட நிலையில். மீண்டும் வரும் 26-ம் தேதி வேலை நிறுத்ததை 9 வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை 25-ம் தேதி கிறிஸ்துமஸ், அரசு விடுமுறை மேலும் 26-ம் தேதி வேலை நிறுத்தம் என மீண்டும் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT