இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக ஹைதரபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸ்னஸில் உதவி பேராசிரியாக பணியாற்றும் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதற்குமுன் தலைமை பொருளாதார ஆலோகசராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியம் கடந்த ஜூன் மாதம் பதவி விலகினார். அதன் பின் ஆறு மாதங்கள் கழித்து அந்தப் பதவிக்கு கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் பதவிகாலம் மூன்று ஆண்டுகள் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் அஃப் பிஸ்னஸில் உதவி பேராசிரியராக இருக்கும் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், சிகாகோவில் பிஎச்டி பட்டம் பெற்றவர். ரிசர்வ் வங்கி நிபுணர்கள் கமிட்டியில் இவர் இடம் பெற்றுள்ளார். மேலும் கார்ப்ரேட் நிர்வாகம் போன்றவற்றிலும் நீண்ட ஆய்வுகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Show comments