Gautham Adani is the 2nd richest person in the world!

Advertisment

உலகில் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரராக இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி உயர்ந்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் இதழின் பெருமை பணக்காரர் பட்டியலின் படி, கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 12 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து, இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். இதன் மூலம் ஏற்கனவே இரண்டாவது பெரும் பணக்காரராக இருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளியுள்ளார் அதானி.

அதானி குழும பங்குகளின் மதிப்பு உயர்ந்ததால், அவருடைய சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. துறைமுகங்கள், சுரங்கம், உள் கட்டமைப்பு, மின்சாரம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் அதானி குழுமம் வர்த்தகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.