தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூன்றாவது அணி அமைக்கும் நோக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேற்று சந்தித்தார். அதுபோல கர்நாடக முதல்வர் குமாரசாமியுடனும் தொலைபேசியில் பேசினார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மே 13-ம் தேதி சந்திக்க உள்ளார். சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடக்க இருந்தது. இதில் திமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த தகவலை சந்திரசேகர் ராவின் மகள் கவிதா மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், "திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டு தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தரப்பில் அணுகவில்லை" என கூறியுள்ளார்.
Show comments