முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், குறைந்த விலையில், பெரிய திரையுடன் கூடிய நவீன 4ஜி ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
நவீன வசதிகளுடன் கூடிய புதிய 4ஜி ஸ்மார்ட் போனை தயாரிக்க ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும். இதற்காக அமெரிக்காவின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான பிளெக்ஸூட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜியோ நிறுவனம் இதற்குமுன் வெளியிட்ட செல்போன்களில் ஸ்மார்ட் ஃபோன் அளவிற்கு வசதிகள் இருந்தாலும் அது டச் ஸ்கிரீன் வசதியுடன் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த புதிய ஸ்மார்ட் ஃபோன், டச் ஸ்கிரீனுடன் வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Show comments