Skip to main content

ஜியோவுக்கு மோடி அள்ளிக்கொடுக்கும் 9,500 கோடி ரூபாய்! 

Published on 10/07/2018 | Edited on 10/07/2018

அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் நடக்கிற அரசுதான் மோடி தலைமையிலான மத்திய அரசு என்பதற்கு மீண்டும் ஒரு ஆதாரம் கிடைத்திருக்கிறது.

 

modi nita ambani



இந்தியாவில் புகழ்பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுடன் இன்னும் தொடங்கவே படாத ஜியோ இன்ஸ்டிட்டியூட்டையும் மாண்புமிக்க கல்வி நிறுவனம் என்று மோடி அரசு பட்டியலிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அந்த நிறுவனத்துக்காக 9 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு நிதியையும் ஒதுக்கி இருக்கிறது. மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறதா என்று கேட்பவர்கள் இதையெல்லாம் மோடி அரசின் ஊழல் லிஸ்ட்டில் சேர்க்கவே மாட்டார்கள். இதை மோடி அரசின் கல்வி வளர்ச்சி சாதனையில் சேர்த்து விடுவார்கள். நிஜத்தில் இது வளர்ச்சியா?

இந்தியாவில் மிக நீண்ட காலமாக பழம்பெருமைமிக்கதாக பம்பாய் மற்றும் டெல்லி ஐஐடிகளும், பெங்களூருவில் உள்ள ஐஐஎஸ்சி, பிலானியில் உள்ள பிஐடிஎஸ்சும், மணிபால் பல்கலைக்கழகமும் கருதப்படுகின்றன. இவைதவிர, சென்னை மற்றும் கோரக்பூரில் உள்ள ஐஐடிகளுகும் பழம்பெருமை வாய்ந்தவைதான்.

 

 


ஆனால், முதல் ஐந்து கல்வி நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் குரூப்பிற்கு சொந்தமான ஜியோ இன்ஸ்ட்டிட்யூட்டை மட்டும் சேர்த்திருக்கிறார்கள். இந்த இன்ஸ்ட்டிட்யூட்டைப் பற்றி கூகுளில் தேடினால் ஒரு விவரமும் கிடைக்கவில்லை. அதாவது அப்படி ஒரு கல்வி நிறுவனமே இல்லை. இல்லாத, இதுவரை இயங்கவே தொடங்காத கல்வி நிறுவனத்துக்கு மோடி அரசு முதலீட்டு மூலதனமாக 9 ஆயிரத்து 500 கோடி ரூபாயை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒதுக்கியிருக்கிறது.

இதுதொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் ஆர்.சுப்பிரமணியனின் விளக்கம் வினோதமாக இருக்கிறது. அதாவது, இந்த ஆறு நிறுவனங்களையும் மாண்புமிக்க கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சேர்த்திருப்பதாக லெட்டர் கொடுத்திருக்கிறோம். இனி அவர்கள் தங்களை டாப் கல்வி நிறுவனங்களாக மாற்றும் வகையில் உறுதியான திட்டங்களுடன் வருவார்கள் என்று சாதாரணமாக சொல்லியிருக்கிறார்.

 

 


நமது கேள்வி என்னவென்றால் சென்னை மற்றும் காரக்பூரில் பெருமையுடன் இயங்கிக் கொண்டிருக்கிற ஐஐடிக்களுக்கு கிடைக்காத வாய்ப்பை தொடங்கப்படாத ஜியோ கல்வி நிறுவனத்துக்கு ஏன் கொடுக்க வேண்டும்? மோடிக்கு ஜியோ செலவழித்த தொகையைத்தான் இப்படி திருப்பிக் கொடுக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.


 

 

 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.