"ஜெட் ஏர்வேஸ்" நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் "ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்" (Air India Express) , "ஸ்பைஸ்ஜெட்" (Spice jet) , "இண்டிகோ" (Indigo) ஆகிய விமான நிறுவனங்களில் பணியில் சேர தொடங்கியுள்ளனர். இதில் 2-3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்ற "பைலட்கள்" , விமான பராமரிப்பு பொறியாளர்கள் உட்பட இவர்களின் மாத சம்பளம் ரூபாய் 1,50,000 முதல் 2,00,000 வரை தர இந்த விமான நிறுவனங்கள் முன் வந்துள்ளனர். இருப்பினும் "ஜெட் ஏர்வேஸ்" நிறுவனத்தில் ஊழியர்கள் மாதம் ரூபாய் 4,00,000 வரை பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வரலாற்றில் விமான பைலட்கள் மற்றும் விமான பராமரிப்பு பொறியாளர்கள் அதிக சம்பளத்தில் இருந்து குறைந்த சம்பளத்திற்கு செல்வது .
இதுவே முதல் முறை ஆகும். முன்பு வாங்கிய மாத சம்பளத்தில் இருந்து 30-50% வீதம் வரை குறைவான சம்பளத்தையே விமான ஊழியர்கள் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (15/04/2019) மீண்டும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் மற்றும் சுமார் 1100 பைலட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக தெரிவித்தனர். இதனால் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பணியாற்றும் மேலாளர்கள் , விமான பொறியாளர்கள் , விமான பராமரிப்பாளர்கள் உட்பட 20000 பேர் வேலை இழந்துள்ளதாக ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களின் கூட்டமைப்பின் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் நாடு முழுவதும் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பி.சந்தோஷ் , சேலம்.