ADVERTISEMENT
ADVERTISEMENT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு நிலவிவரும் நிலையில் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லடாக்கின் கார்துங்லா பகுதியில் இன்று காலை ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் 10 பேர் பனிக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளனர். இந்த பனிச்சரிவில் சிக்கிய 10 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் அம்மாநில அவசரகால மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
Show comments