ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.5 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் சிறிய அளவில் ஏற்பட்டதால் உயிர்சேதம் ஏற்படவில்லை என்றும், கட்டடம் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் வந்தபோது, மக்கள் அனைவரும் பயந்து தங்களை காப்பாற்றி கொள்ள வீட்டை விட்டு சாலைகளுக்கு வெளியேறினார்கள்.
ADVERTISEMENT
இந்திய வானிலைத் துறை(ஐஎம்டி), பத்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மாநிலத்தின் பல பகுதிகளில் தாக்கம் இருந்திருக்கிறது. இருந்தாலும் இது சில வினாடிகள் மட்டுமே நீடித்தது என தெரிவித்துள்ளது. இதனை சாதாரண நிலநடுக்கம் என்று வானிலை துறை வகைப்படுத்தியுள்ளது. கடந்த மாதமும் இதே போன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அளவும் 4.5 ரிக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments