ADVERTISEMENT
சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் இறுதிப் போட்டி ஐதராபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த போட்டி மாற்றப்பட்டுள்ளது. 12,000 பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்ட 3 கேலரிகளுக்கு சென்னை மாநகராட்சி இன்னும் அனுமதி வழங்காததால், இடவசதி பற்றாக்குறை காரணமாக இந்தப் போட்டி மாற்றப்பட்டுள்ளது. மே12ம் தேதி ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இறுதிப் போட்டிக்கு பதிலாக முதல் தகுதிச் சுற்று சென்னையில் நடக்கிறது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments