ADVERTISEMENT

இங்கிலாந்து தடுப்பூசிக்கு விரைவில் அனுமதியளிக்கும் இந்தியா..

11:36 AM Dec 24, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று நோய்க்கு ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. ஏற்கனவே பைசர் தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ள அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள், இரண்டாவததாக மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளன.

ADVERTISEMENT

இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு உள்ள தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவும் இணைந்து ஒரு தடுப்பூசியை தயாரித்துள்ளன. குறைந்த விலையில், பாதுகாக்க எளிதான வகையில் உருவாகியுள்ள இந்த தடுப்பூசிக்கு, அனுமதி கோரி இங்கிலாந்து நாட்டின் சுகாதார கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கக்கோரி, இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசி குறித்த முழு விவரங்களும் அந்த அமைப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த தடுப்பூசிக்கு விரைவில் அனுமதியளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகிவுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT