இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 834 லிருந்து 873 ஆக அதிகரித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்தியர்கள் 826 பேர், வெளிநாட்டினர் 47 பேர் என மொத்தம் 873 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 180, கேரளாவில் 173 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை கரோனாவால் 19 பேர் இறந்துள்ளனர். மேலும் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66 லிருந்து 79 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 149 பேருக்குக் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
Show comments