ADVERTISEMENT

கோடை வெயிலின் தாக்கம்... பிரதமர் மோடி ஆலோசனை!

07:57 PM May 05, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலை வெப்ப அலை வீசக் கூடும் என்பதால் நாட்டில் எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழு அதிகாரிகள், மத்திய அமைச்சரவை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது தொடர்பாகவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT