இன்று பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கின்ற நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சீன அதிபர் ஷி ஜின்பிங் சாலை மார்க்கமாக கார் மூலம் மாமல்லபுரம் வந்தடைந்த நிலையில் அவரை வரவேற்க வருகை தந்த பிரதமர் மோடி, தமிழகத்தின்பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தார்.

Advertisment

 Modi meets Chinese President ...

வழக்கமாக அணியும் குர்தாவுக்கு பதில் வேட்டி சட்டையுடன் தோளில் துண்டு அணிந்த படி மாமல்லபுரம் வந்தடைந்த மோடி.மாமல்லபுரத்தின் அர்ஜுனன் தபசு பகுதியில் சீன அதிபரைவரவேற்றார். அர்ஜுனன் தபசு சிற்பங்கள் குறித்து சீன அதிபரிடம் பிரதமர் மோடி விளக்கிக்கொண்டிருந்த பொழுது அவர்களது பின் புறத்தில் கருப்புநிற நாய் ஒன்று குறுக்கே ஓடியது.

இவ்வளவு பாதுகாப்புகளையும் மீறி அங்கு நாய் ஓடியது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு சிறிது அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அங்கிருந்து நகர்ந்த அவர்கள் வெண்ணெய் உருண்டை பாறைஉள்ள இடத்திற்கு நடந்து சென்றனர்.