ADVERTISEMENT
ADVERTISEMENT
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலமானார். 88 வயதான அவர் அடல்பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பாதுகாப்பு துறை அமைச்சராக செயலாற்றினார். அப்போது ஏற்பட்ட கார்கில் போரை சிறப்பாக கையாண்டதால் பலரது பாராட்டுகளை பெற்றார். மேலும் இவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த போதுதான் இந்தியா பொக்ரான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
Show comments