ADVERTISEMENT

திருமணம் ஆகி முதல் நாளே என்னை.... கணவன் மீது பரபரப்பு புகார் அளித்த மனைவி

06:11 PM Sep 04, 2018 | rajavel


ஆந்திர மாநிலம் கர்னூர் பகதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத். இவருக்கு கடந்த ஆண்டு திரிவேணி என்பவருடன் ஆகஸ்ட் 2ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் திரிவேணி, தனது பெற்றோருடன் ராயதுர்கம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரிவேணி, திருமணத்தின்போது 45 லட்சம் ரொக்கம், 10 லட்சம் மதிப்புள்ள நகைகள், திருமண செலவிற்காக 10 லட்சம் என் வீட்டில் இருந்து கொடுத்தார்கள்.

திருமணம் ஆன முதல் நாளிலேயே என்னை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். என்னை கட்டாயப்படுத்தி துன்புறுத்தி நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தார். தினமும் என்னை கொடுமைப்படுத்தினார். திருமணம் ஆகி அடுத்தவர்கள் வீட்டுக்கு சென்றிருந்ததால் பயத்தில் இதனை அவர்களது வீட்டிலும் நான் தெரிவிக்கவில்லை. எங்களது பெற்றோர் கவலைப்படுவார்கள் என்று அவர்களிடம் தெரிவிக்கவில்லை.

தினம் தினம் கொடுமைப்படுத்தினார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத நான், மாமனார் மாமியார் ஆகியோரிடம் தெரிவித்தேன். அவர்கள், அவன் அப்படித்தான் இருப்பான். அவன் சொன்னபடி கேட்க வேண்டும் என்றனர். திடீரென்று ஒரு நாள் என்னிடம், நீ காசநோயாளி என்பதால் உன்னை விவாகரத்து செய்ய வேண்டும். அதற்கு சம்மதித்து கையெழுத்து போடும்படி மிரட்டினார்கள்.

இதற்கு பிறகுதான் என்னுடைய வீட்டில் உள்ளவர்களுக்கு, இங்கு நடக்கும் கொடுமைகளை சொன்னேன். அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துப்போடவில்லை என்றால், நிர்வாணப் படங்களை, வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்கள்.

நான் காசநோயாளி இல்லை என்று சொன்னது மட்டுமல்லாமல், தனியார் மருத்துவமனையில் பரிசோத்து அந்த மருத்துவமனையின் அறிக்கையையும் காண்பித்தேன். இருப்பினும் எனது கணவன் கொடுமைப்படுத்தினார். திருமணத்திற்கே தகுதியற்றவன் என கூறிய என் கணவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சிகளை எடுத்து வருகிறார்.

ஆகவே திருமணத்தின்போது நாங்கள் வழங்கிய 55 லட்சம் ரொக்கம், 10 லட்சம் மதிப்புள்ள நகைகளை, எனது படிப்பு சான்றிதழ்களை பெற்றுத் தரும்படி போலீசில் புகார் அளித்துள்ளோம் என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT