Skip to main content

நண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகரில் உள்ள வர்ஷினி நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் குமாரவேல். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஆறு வயதில் வர்ஷினி, நான்கு வயதில் ராகுல் என பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி பூட்டிக்கிடந்த வீட்டுக்குள்ளிருந்து வீட்டு வாசற்படி வழியே ரத்தம் வழிந்து வெளியே ஓடி உள்ளது.


 

Panruti



இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பண்ருட்டி டிஎஸ்பி நாகராஜன் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் விரைந்து வந்து பூட்டியிருந்த வீட்டை திறந்து  பார்த்தபோது குமாரவேல் மனைவி ராஜேஸ்வரி தலை நசுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கணவர் குழந்தைகள் யாரும் அங்கு இல்லை. இதையடுத்து நெய்வேலி இந்திராநகர் வசிக்கும் ராஜேஸ்வரியின் தாயார் சுசீலா அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.


 

விசாரணையில் காடாம்புலியூர்  சேர்ந்த வாடகை கார் ஓட்டும் டிரைவர் குமரவேலுக்கும், ராஜேஸ்வரிக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். சில ஆண்டுகள் காடாம்புலியூரில் வசித்து வந்துள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பண்ருட்டி வர்ஷா நகரில் குடியேறினர் என தெரிய வந்தது.


 

Panruti



அந்த வீட்டில் கிடந்த செல்போனை கண்டெடுத்த போலீசார் அந்த போனிலிருந்து எண்களை கண்காணித்து தலைமறைவான ராஜேஸ்வரி கணவர் குமரவேலுவை காடாம்புலியூர் பகுதியில் தேடிப்பிடித்து கைது செய்துள்ளனர். 

 

குமாரவேல் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், என் மனைவியை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்கள் இருவருக்கும் சமீபகாலமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் என்னிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றாள். அங்கிருந்து எனக்கு விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதன் பிறகு சமாதானமாக போனாம். ராஜேஸ்வரி விருப்பபடி பண்ருட்டி வர்ஷா நகரில் குடியேறினோம். இங்கு வந்த பிறகும் என் மனைவி திருந்தவில்லை. 

 

என் மனைவி செல்போனில் டிக்டாக் மூலம் பாடியும் நடித்தும் மிமிக்கிரி செய்து வெளியிட்டு அதன்மூலம் பல ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்தார். அதை நான் பலமுறை கண்டித்தேன். அவள் கேட்கவில்லை. காதலர் தினத்தன்று நான் கார் சவாரி சென்று விட்டேன். அதை சாதகமாக்கிக் கொண்டு ஆண் நண்பர்களுடன் வெளியூர் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். இது பற்றி அவரிடம் எச்சரித்தேன். நம் குழந்தைகள் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என்ற தவறான பழக்கத்தை நிறுத்துமாறு கூறினேன். 



 

இதனால் இருவருக்கும் வாய் சண்டை ஏற்பட்டது. அதன் பின் ராஜேஸ்வரி தூங்கி விட்டார். கோபம் தணியாமல் இருந்த நான், இரவு பதினொரு மணிக்கு மேல் பக்கத்தில் இருந்த குழவிக் கல்லை எடுத்து ராஜேஸ்வரி தலையில் போட்டுவிட்டு, அதோடு அங்கிருந்து இரும்பு ராடை எடுத்து தலையில் தாக்கினேன். ராஜேஸ்வரி அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் இறந்து போனார்.

 

அதையடுத்து  என் குழந்தைகளை அழைத்துக்கொண்டு காடாம்புலியூர் சென்றுவிட்டேன் போலீசார் என்னை காடாம்புலியூர் இல்   தேடி வந்து கைது செய்தனர் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
 

அதே நேரத்தில் போலீசார் தரப்பில் கேட்டபோது, குமரவேல் - ராஜேஸ்வரி காதலித்து திருமணம் கொண்ட பிறகும் குமரவேலு திருநங்கை ஒருவரிடம் பழக்கம் இருந்துள்ளது. இது விஷயமாக ராஜேஸ்வரி குமரவேலிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் இருவரும் விவாகரத்து வரை சென்று மீண்டும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். ராஜேஸ்வரி டிக் டாக் மூலம் மிமிக்ரி செய்து வெளியிட்டு இருப்பது உண்மை. எது எப்படி இருந்தாலும், இரண்டு சிறு குழந்தைகள் இப்போது தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

ஒரு குடும்பத்தின் சிதைவு கண்முன்னே நடந்துள்ளது. ராஜேஸ்வரியின் தாயார் சுசிலாவின் புகாரின்பேரில் குமரவேல் கைது செய்து சிறைக்கு அனுப்பி அனுப்பியுள்ளோம் என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்’ - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Former ADMK MLA Seizure of documents at home  Anti Corruption Bureau 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (28.02.2024) காலை 10 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2011 - 2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது, பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக டெண்டர் விடுவதில் ரூ. 20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். 

பன்னீர்செல்வம் மற்றும் அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், தற்போது இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி பண்ருட்டி மற்றும் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் கணவரும் முன்னாள் நகர்மன்றத் தலைவர் பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 10 மணி நேரமாக நடந்து வரும் சோதனையில் குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய 47 ஆவணங்கள், விவசாய நிலம் மற்றும் வீட்டு மனை சொத்து ஆவணங்கள் என ரூ. 15 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.