ADVERTISEMENT

விவசாயிகள் போராட்டம் எதிரொலி... -அனைத்து கட்சி கூட்டத்துக்கு மோடி அழைப்பு

02:39 PM Nov 30, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

பிரதமர் மோடி தலைமையில் வருகிற 4ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவில் கடந்த எட்டு மாதங்களாக கரோனா பாதிப்பு என்பது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக 90 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த நோயினால் இந்தியாவில் பாதிக்கப்பட்டனர். இதற்கான தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த சோதனை மூன்றாம் கட்டத்தில் இருந்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க டெல்லியில் விவசாயிகள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் மத்திய அரசு செய்வதறியாது திகைத்துள்ளது. இந்நிலையில் தற்போது நிலவும் சூழ்நிலைகள் குறித்து விவாதிப்பதற்காக மத்திய அரசு வரும் 4ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT