இதனால் தொலைத்தொடர்பு மற்றும் மின் வசதிகள் உள்ளிட்டவை புவனேஸ்வர் மற்றும் பூரி மாவட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் அங்கு 6400 மீட்டர் உயரத்தில் இரண்டாவது மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஃபானி புயலால் 20 முகாம்கள் காற்றில் பறந்துள்ளனர். இருப்பினும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து எவரெஸ்ட் ட்ரெக்கிங் நிறுவனங்களுக்கு நேபாள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ட்ரெக்கிங் செல்வோரின் பாதுகாப்பை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மற்றும் ஆந்திராவில் அதிக சேதத்தை புயல் ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் ஒடிசாவில் உடனடியாக தொலைத்தொடர்பு வசதிகள் உடனடியாக சீர் செய்யப்படும் என ஏர்டெல் , வோடாபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.