ADVERTISEMENT
ADVERTISEMENT
டெல்லி உட்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று (12.02.2021) இரவு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
மத்திய ஆசியா நாடான தஜிகிஸ்தானில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.3ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ஜம்மு - காஷ்மீர், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களிலும், பாகிஸ்தானிலும் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் இந்தியாவில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. இருப்பினும் ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில், வீடுகளில் தெறிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாகிஸ்தானிலும் வீடுகளில் தெறிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ADVERTISEMENT
Show comments