ADVERTISEMENT

சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி- முன்பதிவு தொடங்கியது!

10:09 AM Jan 01, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கரோனா தடுப்பூசிப் போட்டுக் கொள்வதற்கான முன்பதிவு இன்று (01/01/2021) தொடங்கியது. தகுதியுடைய சிறார்கள் உடனடியாக முன்பதிவு செய்து கொண்டு, தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

https://www.cowin.gov.in/ என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆதார் அட்டை, பாஸ்போர்ட், பள்ளி அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களைப் பதிவிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். நாடு முழுவதும் நாளை மறுநாள் (03/01/2021) முதல் சிறார்களுக்கு 'கோவாக்சின்' தடுப்பூசிப் போடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT