காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் பொது மேடையில் மக்கள் முன்னிலையில் பிரியங்கா காந்திக்கு கோஷமிடுவதற்கு பதிலாக, பிரியங்கா சோப்ராவுக்கு கோஷமிட்டது சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
டெல்லியில் நடைபெற்ற பேரணி ஒன்றில் டெல்லியின் காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுரேந்தர் கே.ஆர், "பிரியங்கா காந்தி வாழ்க" என கோஷமிடுவதற்கு பதிலாக, "பிரியங்கா சோப்ரா வாழ்க" என கோஷமிட்டார். "சோனியா காந்தி ஜிந்தாபாத்! காங்கிரஸ் கட்சி ஜிந்தாபாத்! ராகுல் காந்தி ஜிந்தாபாத்! பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத்!" என அவர் முழக்கமிட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ADVERTISEMENT
Show comments