ADVERTISEMENT

ஆசையாக வளர்த்த நாயை அடித்துக்கொன்ற கொடூரன் மீது வழக்கு பதிவு!

12:32 PM Aug 25, 2018 | vasanthbalakrishnan

புதுச்சேரி முத்தியால்பேட்டை, மஞ்சினி நகரை சேர்ந்தவர் வினாயகமூர்த்தி. இவர் வீட்டில் Spits வகை நாய்குட்டி வளர்த்து வருகிறார். வினாயகமூர்த்தியும் அவரது குடும்பத்தார்களும் அந்நாய்குட்டியை தங்கள் வீட்டின் ஒரு உறுப்பினராக, செல்லமாகவும் வளர்த்து வந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் கடந்த 18/08/2018 அன்று மாலை வினாயகமூர்த்தி வளர்த்து வந்த செல்ல பிராணியான "சுவிமா" என்கிற நாய்குட்டி அவரது வீட்டின் எதிரே விளைந்துள்ள புல்லை சாப்பிட சென்றதாக தெரிகிறது. அப்போது எதிர்வீட்டின் உரிமையாளரான குமரன் என்பவர் அவரது வீட்டு வாசலில் வினாயகமூர்த்தி வளர்க்கும் நாய்குட்டி வந்து அசிங்கம் செய்கிறது என்று வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துள்ளார். ஒருகட்டத்தில் கோபம் தலைக்கேறிய குமரன் தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த சவுக்கு தடியால் வினாயகமூர்த்தி வளர்த்து வந்த "சுவிமா" என்கிற நாய்குட்டியை அடித்துள்ளார். வலிதாங்க முடியாமல் கத்திக்கொண்டே வினாயகமூர்த்தியின் வீட்டிற்குள் ஓடிவந்து விழுந்த அந்த நாய்குட்டி பரிதாபமாக இறந்துபோனது.

ADVERTISEMENT

இதுகுறித்து வினாயகமூர்த்தி புதுச்சேரியில் இயங்கி வரும் We for Voiceless-Animal Welfare Organization அமைப்பின் தலைவர் ஜெபின் அவர்களுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அவ்வமைப்பின் நிர்வாகிகள் கலைப்பிரியன், ஐசக், சாம்ராஜ் ஆகியோர் முதற்கட்ட விசாரணையில் இறங்கினர். நடந்த சம்பவம் உண்மை என கண்டறியப்பட்டு 21/08/2018 அன்று புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.


முத்தியால்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் புகாரின்பேரில், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 429-ன் கீழ் வழக்கு பதிவு செய்து இறந்து போன நாய்குட்டியின் உடலை, புதுச்சேரி கால்நடை மருத்துவர் மோகன், மருத்துவர் மரியா, சுனில், மற்றும் முருகன் ஆகியோர் கொண்ட கால்நடை மருத்துவ குழு மற்றும் முத்தியால்பேட்டை பகுதி கிராம நிர்வாக அலுவலர் (VAO) முத்துகுமார் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் வீட்டு நாயை கொலை செய்த குமரனை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

வாயில்லா ஜீவனை அடித்து கொன்ற இதுபோன்ற கொடூரன்களை காவல்துறையும், நீதித்துறையும் தயவு காட்டாமல் சட்டப்படி தண்டிக்கவேண்டும் என்பது விலங்குகள் நல ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT