Skip to main content

தாய் காண்டாமிருகத்தை கொம்புக்காக கொன்ற கும்பல்; பிரியமறுத்த குட்டி காண்டாமிருகம்

Published on 02/09/2018 | Edited on 02/09/2018

 

rhino

 

 

 

விலங்குகளின் ரோமம் மற்றும் கொம்புகளை வேட்டையாடி  கடத்தும் கும்பல் அரியவகை பெண் வெள்ளை காண்டாமிருகத்தை கொன்றதோடு அதன் குட்டி காண்டாமிருகத்தையும் தாக்கியுள்ளனர். ஆனால் அந்த குட்டி காண்டாமிருகமோ தாயின் பிரிவை தாங்கமுடியாமல் பூங்காவில் அலைந்து திரிந்து வருகிறது.

 

தென்னாப்பிரிக்காவில் குரூஜர் தேசிய பூங்கா அமைந்துள்ளது அங்கு உள்ள அரியவகை வெள்ளை நிற பெண்  காண்டாமிருகம் ஒன்று குட்டி ஒன்றை ஈன்றது அந்த குட்டிக்கு ஆர்தர் என்று பெயர்வைத்து செல்லமாக பார்த்துவந்தனர் பூங்கா நிர்வாகத்தினர். இப்படிபட்ட நிலையில் அந்த பெண் காண்டாமிருகம் சர்வதேச ரோமம் மாற்றும் காண்டாமிருக கொம்புகளை கடத்தும் கும்பலால் கொல்லப்பட்டது. அப்போது அருகில் இருந்த அந்த குட்டி காண்டாமிருகத்தையும் அந்த கும்பல் கோடரியால் தாக்கியுள்ளனர் அப்போது தாயை பிரியமுடியாமல் சுற்றிவந்துள்ளது. 

 

rhino

 

 

 

அந்த குட்டி காண்டாமிருகத்திற்கு கொம்பு முளைக்காததால் அதை தாக்கிவிட்டுமட்டும் சென்றுவிட்டனர். ஆனால் அம்மாவின் பிரிவை தாங்கமுடியாத ஆர்தர் அம்மா இறந்த இடத்தை சுற்றி சுற்றி வருவதாக  கம்பிரியா விலங்குகள் பூங்காவின் தலைமை செயல் அதிகாரி கேரன் புரூவர்கூறியுள்ளார். கொஞ்சநாட்கள் கழித்து இந்தநிலை மாறும் எனவும் கூறியுள்ளார். மேலும் அந்த குட்டி காண்டாமிருகம் தற்போது பூங்காவால் சிரத்தையுடன் பராமரிக்கப்பட்டுவருகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒட்டகங்கள் சித்ரவதை; விலங்கு பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

torture of camels; Officials inspect animal farm in Sulur

 

கோவையில் ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் அங்கிருந்த பல்வேறு விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

அண்மையில் சமூக வலைத்தளங்களில் ஒட்டகம் ஒன்றை சிலர் தாக்கி துன்புறுத்தும் காட்சி ஒன்று வைரலாகி இருந்தது. இந்த சம்பவம் கேரளாவில் நிகழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில் அது கோவையில் நிகழ்ந்த சம்பவம் என்பது தெரிய வந்தது. இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், கோவை சூலூரில் இயங்கி வந்த சங்கமித்ரா என்ற விலங்கு பண்ணையில் இந்த கொடுமை நிகழ்ந்தது தெரிய வந்தது.

 

அந்த விலங்கு பண்ணையில் சட்டவிரோதமாக விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது. உடனடியாக விலங்கு நல வாரியம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு காட்சிப்பொருளாக பயன்படுத்த ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை உரிய அனுமதி இல்லாமல் அடைத்து வைத்ததாக தெரியவந்தது. இந்த சோதனையில் ஐந்து ஒட்டகங்கள், நான்கு குதிரைகள், இரண்டு கழுதை உள்ளிட்ட அனைத்து விலங்குகளையும் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் விலங்கு நல வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மீட்கப்பட்ட ஒட்டகங்கள் சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை சட்டவிரோதமாக நடத்தி வந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயாராகி வருகின்றனர்.

 

 

 

Next Story

வண்டலூர் பயணிக்கும் கோவை வ.உ.சி பூங்கா உயிரினங்கள்

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

Vandalur Traveling Coimbatore VUC Park animals

 

கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்த  நிலையில், அங்கிருக்கும் பறவைகள், விலங்குகள் என அனைத்தும் சென்னை வண்டலூர் பூங்காவிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

 

 

 

1965 ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட கோவை வ.உ.சி உயிரியல் பூங்கா தொடர்ந்து செயல்பட்டு வந்தது. பறவைகள், ஊர்வன, பாலூட்டிகள் என சுமார் 530 க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு அங்கு வந்தது. இந்நிலையில்  வ.உ.சி உயிரியல் பூங்காவில் சரியான கட்டமைப்பு வசதி இல்லை எனவும், இயற்கைச் சூழல் இல்லை எனவும் கூறி மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், அங்கீகாரத்தை ரத்து செய்திருந்தது.

 

மாநகராட்சி சார்பில் அங்கீகாரத்தை மீண்டும் வழங்க வேண்டும் என கடிதம் எழுதப்பட்ட நிலையிலும், அங்கீகாரத்தை தர மத்திய ஆணையம் மறுத்துவிட்டது. இந்நிலையில், பூங்கா பராமரிப்பை தமிழக வனத்துறை மேற்கொள்ள மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. இந்நிலையில், கோவையில் உயிரியல் பூங்காவில் இருக்கும் பறவைகள், விலங்குகள் ஆகியவை சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. முதலைகள், கிளிகள், மான்கள், பாம்புகள் என பல்வேறு உயிரினங்கள் பாதுகாப்பாக கூண்டில் அடைக்கப்பட்டு பத்திரமாக எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது.