ADVERTISEMENT
ADVERTISEMENT
சிறுவனைக் கொன்றதாக தாய் யானையும், குட்டி யானையும் போலீசாரால் கைது செய்யப்பட்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அசாம் மாநிலம் கோலாகட் மாவட்டத்தில், சிறுவன் ஒருவன் வளர்ப்பு யானை ஒன்றால் தாக்கி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து மகனை இழந்த சிறுவனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், சிறுவனைத் தாக்கிக் கொன்றதாக கூறப்படும் தாய் யானையையும் குட்டி யானையையும் அதன் உரிமையாளருடன் காவல் நிலையதிற்கு அழைத்து வந்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின்னர் தாய் யானையும் குட்டி யானையும் வனத்துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டன.
Show comments