கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியை சேர்ந்த 1ஆம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி கடந்த மார்ச் 25ஆம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது காணாமல் போனார். அடுத்த நாளான 26ஆம் தேதி வீட்டின் எதிரே உள்ள வீட்டின் பின்புறத்தில் இருந்து துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக சிறுமி கண்டெடுக்கப்பட்டார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கோவையில் பல இடங்களில் போராட்டமும் நடைபெற்றது.

kovai

Advertisment

பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மூச்சுத்திணறடிக்கப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிறுமியின் வீட்டிற்கு எதிரே மனைவியை பிரிந்து பாட்டி வீட்டில் வசித்து வந்த தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை 31ஆம் தேதி கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு கடந்த 16ஆம் தேதி அரசுத்தரப்பு வாதம் நிறைவடைந்த, எதிர்த்தரப்பு இறுதி வாதத்திற்கு இன்றைய தினம் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisment

kovai

இதற்கிடையே, 18ஆம் தேதி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்ட போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி வாதம் நடந்தது. இருத்தரப்பு இறுதி வாதம் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு 27ஆம் தேதி வழங்கப்படும் என நீதிபதி ராதிகா அறிவித்தார். வழக்கின் விசாரணை அடுத்து, கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.விசாரணைக்கு பிறகு 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

kovai

இந்நிலையில் கொல்லப்பட்ட சிறுமியின் உடலில் சிறுமியின் இறப்பிற்கு காரணமான மற்றொரு நபருடைய விந்தணுவானது டி.என்.ஏ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மேற்படி சிறுமியின் இறப்பிற்கு காரணமான மற்றொரு குற்றவாளியைக் கண்டுபிடிக்க கூடுதல் புலன் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வலியுறுத்தி சிறுமியின் தாயார் சார்பில் இன்று(26.12.2019) கோயம்புத்தூர், மகளிர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.