ADVERTISEMENT

54 பயணிகளுடன் கால்வாயில் விழுந்த பேருந்து!

11:23 AM Feb 16, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய பிரதேச மாநிலம் சிதி பகுதியில் இருந்து சத்னாவிற்கு, 54 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தை ஒட்டிய ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் இதுவரை ஏழு பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து நடந்த இடத்திற்கு மாநில பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது. கால்வாய்க்கு வரும் தண்ணீர் வரத்து குறைக்கப்பட்டு மீட்புப்பணிகள் தொடர்ந்து வருகிறது. மத்தியப் பிரதேச மாநில சிவ்ராஜ் சிங் சவுகான், இந்த விபத்து பற்றி மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்துள்ளார். மேலும் மீட்புப்பணிகளை விரைவாக நடத்தவும் அவர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT