ADVERTISEMENT

பாம்பை கடித்த சிறுவன்!! அதன் பிறகு நடந்த சம்பவம்!

08:04 AM Sep 07, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

விஷ பாம்பை சிறுவன் ஒருவன் விழுங்க முயன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி பகுதிக்கு அருகில் இருக்கும் கிராமம் போலாப்பூர். சணல் விளைச்சலுக்கு பெயர் பெற்ற ஊர். இங்கு நேற்று ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக கட்டு விரியன் பாம்பு குட்டி ஒன்று அங்கு வந்துள்ளது. அதைக்கண்ட சிறுவன் அதனை எடுத்து கடிக்க ஆரம்பித்துள்ளான். ஒரு கட்டத்தில் பாம்பு இறந்துவிடவே இதைபார்த்த அவனது தாயார் அவனிடமிருந்து பாம்பை பிடுங்கி உள்ளார். மேலும் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சிறுவனை சோதித்ததில் அவருக்கு எந்த பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT