Skip to main content

விழுப்புரம் அருகே பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைபாம்பு...!

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

கிராமங்களில் பொதுவாக அடுத்தவர் பொருளை அபகரிப்பவர்களை மலை முழுங்கி மகாதேவன் என்பார்கள் ஆனால் உண்மையிலேயே ஒரு ஊரில் மலை முழுங்கி மகாதேவன் என்று அடைமொழியோடு கூறப்படும் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது. இதனால் அந்த ஊர் மக்கள் மட்டுமல்ல சுற்றுப்புற கிராம மக்கள் பயத்தில் உள்ளனர்.

 

10 feet long mountain snake caught at Villupuram

 



விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது புது கேணி புதுகிராமம். இந்த ஊரில் 10 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக உளுந்தூர்பேட்டை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து அப்பகுதியிலுள்ள வரஞ்சரம் காப்புக் காட்டில் கொண்டுபோய் விட்டுள்ளனர். இதுபற்றி கிராம மக்களிடம் நாம்கேட்டபோது இதுவரை எங்கள் பகுதியில் இதுபோன்ற பாம்புகள் நடமாடியது இல்லை. இதுவே முதல் முறை பொதுவாக மலைப்பாம்பு ஆடுகள், அதன் குட்டிகள், பசு கன்றுகள் ஆகியவற்றை விழுங்க கூடியவை.

 



இப்போது எங்கள் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு வயல்வெளிகளுக்கு ஓட்டி செல்வதற்கு அச்சப்படுகிறார்கள். காரணம் இந்த பாம்பு மனிதர்களை கூட தன் வாலால் முதலில் வளைத்து சுருட்டிக்கொண்டு பிறகு விழுங்க கூடியது. இது அவ்வளவு பெரிய பாம்பு இல்லாவிட்டாலும் கூட இந்தப் பகுதியில் இதைவிட பெரிய மலைப்பாம்பு இருக்கின்றது. அது குட்டிகளை ஈன்று இருக்கலாம்.

அதனால் இப்போது பிடிபட்டுள்ள மலைப்பாம்பு போல இன்னும் பல பாம்புகள் எங்கள் பகுதியில் இருக்கலாம். எனவே வனத்துறை அதிகாரிகள் தேடி அவைகளை கண்டுபிடித்து அதிக காடுகள் உள்ள பகுதியில் கொண்டு போய் விட வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். ஆனால் உண்மையிலேயே இது போன்ற பாம்புகள் இன்னும் பல இருக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் வனத்துறையை சேர்ந்த சிலர். இந்த மலைப்பாம்பு பிடிபட்ட பிறகு அப்பகுதி மக்கள் வயல்வெளி வேலைக்கும் ஆடுகள் மாடுகள் மேய்ப்பதற்கும் காட்டுப்பகுதிக்கு செல்வதற்கு அச்சப்பட்டு முடங்கி கிடக்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

ரயிலில் புகுந்த பாம்பு; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A snake that entered the train; Tragedy befell the young man


கேரளாவில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் தென்காசியைச் சேர்ந்த கார்த்திக் சுப்பிரமணியம்(21) என்ற இளைஞர் பயணித்தார். ரயிலின் 7ஆம் நம்பர் கோச்சில் அவர் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, ரயில் எட்டுமானூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார்த்திக் சுப்பிரமணியம் தன்னை ஏதோ கடித்தது போல் உணர்ந்துள்ளார். உடனடியாக அந்தப் பகுதியைச் சோதனையிட்டு பார்த்ததில் அங்கு ஒரு நாகப்பாம்பு சுருண்டு கிடந்தது கண்டு அதிர்ந்துபோனார்.

தன்னை பாம்பு கடித்ததை உணர்ந்த கார்த்திக் மற்ற பயணிகளிடம் இதனைச் சொல்ல உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, கோட்டயம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அந்த ரயில் பெட்டிக்குள் எலிகள் அங்கும் இங்குமாக ஏராளமாக ஓடிக் கொண்டிருந்ததாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக எலிகளை உணவாக சாப்பிட பாம்பு அங்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், கோட்டயம் ரயில் நிலையத்திலேயே அந்தப் பெட்டி மட்டும் தனியாக கழட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ரயிலில் பயணித்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.