புதுச்சேரி செயிண்ட் தெரேஸ் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கடந்த பிப்ரவரி 24- ஆம் தேதி அன்று தனது வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அதில், இரண்டு இளைஞர்கள் கார்த்திகேயனின் இரு சக்கர வாகனத்தை மற்றொரு இரு சக்கர வாகனத்தைக் கொண்டு காலால் தள்ளி செல்வது பதிவாகி இருந்தது,
மேலும், கேமராவில் பதிவான இருவரும் நகர பகுதிகளில், மேலும் சில இடங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்ததையடுத்து, காவல்துறை கண்காணிப்பாளர் தீபிகா உத்தரவின் பேரில் புதுச்சேரி கிழக்கு பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்,
இந்நிலையில் சர்தர் வல்லபாய் பட்டேல் சாலை, பழைய சாராய ஆலை அருகே பெரியகடை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமான வகையில் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், அவர்களை சிறையில் அடைத்தனர்.