Skip to main content

150 கிலோமீட்டர்... 60 சிசிடிவி கேமராக்கள்... ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது... கொள்ளையனை சுற்றிவளைத்து பிடித்த தமிழக போலீஸ்!!

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

சென்னையில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருட்டு பேர்வழியை சிசிடிவி வழியாக சுமார் 150 கிலோமீட்டர் பயணித்து போலீசார் கைது செய்துள்ளனர்.

cctv


சென்னை ராயப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி 7 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றதாக சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்திற்கு புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ள உதவிஆணையர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கொள்ளை நடைபெற்ற வீட்டின் வெளிப்பக்கத்தில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவை பரிசோதித்ததில் அதில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. அவன் அங்கிருந்து வடபழனி சிக்னல் சென்றது,  அங்கிருந்து மதுரவாயல் மேம்பாலம் வழியாக செங்கல்பட்டு சென்றது என அவனை தொடர்ந்து 150 கிலோமீட்டர் தூரம் சிசிடிவி காட்சிகளின் வழியாகவே போலீசார் அவனை பின்தொடர்ந்துள்ளனர்.

cctvcctv

செங்கல்பட்டு சென்ற அவன் அங்கிருந்து விக்கரவாண்டி சென்று டூ வீலருக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு அங்கிருந்து மீண்டும் திண்டிவனம் சென்ற அவன் ஆரோவில் வழியாக புதுச்சேரி நுழைவுவாயில் முன்னுள்ள வணிக வரி அலுவலகத்தை கடந்து ரஜீவகாந்தி சிலையை தாண்டி செல்ல அதற்குமேல் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் போலீசார் பார்வையிலிருந்து மறைந்தான். சுமார் 150 கிலோமீட்டர் தூரம் 60 சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அவனை பின்தொடர்ந்துள்ளனர்.

cctvcctvcctv

இந்நிலையில் அவனை பல இடங்களில் தேடியும் அவனை பிடிக்கமுடியாததால் அவனது புகைப்படம் புதுச்சேரி போலீசாருக்கு தமிழக போலீசார் மூலம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் நகைப்பறிப்பு சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தில் ஒருவன் கையும் களவுமாக பிடிபட்ட நிலையில் அவன்தான் தமிழக போலீசார் தேடும் கொள்ளையன் என புகைப்படத்தின் மூலம் அடையாளம் கண்டுகொண்ட புதுச்சேரி போலீசார் தமிழக போலிஸுக்கு தகவலளிக்க அங்கு சென்று அவனை கைது செய்தனர்.

cctv

அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவன் கொல்கத்தாவை சேர்ந்த ஜான்சன் தத் என்றும், சென்னையில் பல்வேறு இடங்களில்  பாதுகாவலராக பணியாற்றிவன் எனவும் தெரியவந்தது. அவன் பணிபுரியும் இடங்களுக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் முதியோர்களை மிரட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

சுமார் 150 கிலோமீட்டர்கள் 60 சிசிடிவி கேமரா கண்கள் மூலம் பயணித்து இறுதியில் கொள்ளையன் சிக்கியிருப்பது தற்போதைய சூழலில் சிசிடிவி கேமராவின் அவசியத்தை உணர்த்தும் விதமாக உள்ளது.

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.