ADVERTISEMENT

வங்கிக் கடன் மோசடி - குஜராத் தொழிலதிபர் கைது

10:23 AM Sep 22, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வங்கிகளில் சுமார் 3,300 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம், சூரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கப்பல் கட்டும் நிறுவனம் ABG Shipyard Limited. இந்த நிறுவனத்தின் தலைவராக உள்ள ரிஷி கமலேஷ் அகர்வால், எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ. உள்ளிட்ட 28 வங்கிகளில் 22,842 கோடி ரூபாய் கடனாக வாங்கி விட்டு வேண்டுமென்றே, திரும்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த 2012- ஆம் ஆண்டு முதல் 2017- ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரிஷி கமலேஸ் அகர்வாலும், அவரது கூட்டாளிகளும் குற்றச்சதி, மோசடி அரசுப் பதவிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற குற்றங்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

மேலும் வங்கிக் கடனை சில குறிப்பிட்ட, நோக்கத்திற்காக பெற்றுக் கொண்டு பிற வழிகளில் செலவு செய்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பான, புகாரில் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இவரது வங்கிக் கடன், 2016- ஆம் ஆண்டு ஜூலை 2019- ஆம் ஆண்டுக்கு இடையே வாரா கடனாக அறிவிக்கப்பட்டிருந்தது. வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனாக வாங்கி விட்டு, திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, நீரவ் மோடி, முகுல் சோக்ஷி போன்றோரின் வரிசையில் ரிஷி கமலேஷ் அகர்வாலும் இணைந்திருப்பது தெரிய வந்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT