வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், ஈரோடு மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீபதி அசோசியேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை தொடர்ச்சியாகநான்கு நாட்களாக நீடித்தநிலையில் தற்போதுநிறைவு பெற்றது.
இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சேலம், கோவை, ஈரோடு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 35- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 21 கோடி ரொக்கம், வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.