ADVERTISEMENT

அவர் என் கணவர் தான்... இறந்தவரின் உடலுக்கு உரிமை கோரும் 7 பெண்கள்!

03:42 PM Oct 04, 2019 | suthakar@nakkh…

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் பவன் குமார். இவர் பண நெருக்கடி காரணமாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக பவன்குமார் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் இவரை பரிசோதித்து பார்க்கையில், ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரியவந்துள்ளது.


ADVERTISEMENT

இதில் ஒரு அதிர்ச்சி நிகழ்வாக ஏழு பெண்கள் இறந்தவர் என்னுடைய தணவர் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளனர் தற்கொலை சம்பவம் குறித்து அருகிலிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதனையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீஸ் தரப்பு விசாரிக்கையில், ஒருவருக்கு 7 பேர் மனைவியா? என போலீசார் மிகவும் குழம்பி இருக்கின்றனர். மேலும் ஒருவருக்கு மற்றொருவரை பற்றி தெரியாது என்றும் கூறப்படுகிறது. இதனால் போலீஸ் தரப்பு செய்வதறியாது திகைத்து, இறுதியாக அனைவரையும் சமாதானப்படுத்தி இறந்தவரின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யும் நிகழ்வு நடந்தேறியது.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT