ADVERTISEMENT

நண்பனுக்காக உயிரைவிட்ட 5 நரிகள்... சோகத்தில் கேரளா!

10:07 AM Jun 19, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மின் கம்பியைக் கடித்த 6 நரிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அறுந்து கிடந்த மின்கம்பியைக் கடித்ததில் 6 நரிகள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தன. மரம் விழுந்ததால் சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் நரி ஒன்று உயிருக்குப் போராடியுள்ளது. போராடிய ஒற்றை நரியைக் காப்பாற்ற 5 நரிகள் முயன்ற நிலையில் தோல்வியில் முடிந்தது. நண்பனைக் காப்பாற்ற மின்கம்பியை வாயால் கடித்து இழுத்த மற்ற ஐந்து நரிகள் உட்பட 6 நரிகளும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

நண்பன் நரியைக் காப்பாற்ற முயன்று மின்கம்பியை வாயில் கடித்தபடி வரிசையாக 6 நரிகள் இறந்து கிடைக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியையும், விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT