Skip to main content

வங்கிகளில் 2 லட்சம் கோடி கடன் மோசடி... அதிர்ச்சியூட்டும் புதிய புள்ளிவிபரம்...

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் என அனைத்து வங்கிகளையும் சேர்த்து கடந்த 11 ஆண்டுகளில் 2.05 லட்சம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

2.05 trillion worth bank frauds happened in india inlast ten years

 

 

2008-09 நிதியாண்டு முதல் 2018-19 நிதியாண்டு வரையான காலத்தில் மொத்தம் 53,334 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றால் வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.2.05 லட்சம் கோடி எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கியில் மட்டும் 6,811 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் அந்த வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.5,033 கோடி. பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 6,793 மோசடிகள் நிகழ்ந்துள்ளன. இதில் ரூ.23,734 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல ஹெச்டிஎப்சியில் ரூ.1,200 கோடி, பாங்க் ஆப் பரோடாவில் ரூ.12,962 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நீரவ் மோடி மோசடி செய்த பஞ்சாப் நேஷனல் ரூ.28,700 கோடியும், ஆக்ஸிஸ் வங்கியில் ரூ.5,301 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் பாங்க் ஆப் இந்தியாவில் ரூ.12,358 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.12,644 கோடியும், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ரூ.493 கோடியும், லட்சுமி விலாஸ் வங்கியில் ரூ.862 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இது தவிர இந்தியாவில் செயல்படும் சில வெளிநாட்டு வங்கிகளிலும் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கியில் ரூ.86 கோடியும், சிட்டி வங்கியில் ரூ.578 கோடியும், ஹெச்எஸ்பிசி வங்கியில் ரூ.312 கோடியும், ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்துவில் ரூ.12 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த இந்த மோசடிகளில் ஏற்பட்ட நஷ்டம் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாடிக்கையாளரிடம் ரூ. 36 லட்சத்தை மோசடி செய்த வங்கி மேலாளர்

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

customer amount Rs 36 lakh cheated bank manager sivaganga

 

வாடிக்கையாளரிடம் ரூபாய் 36 லட்சத்தை மோசடி செய்த வங்கி மேலாளர் தற்போது கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியைச் சேர்ந்தவர்  அல்லா ஹையர். இவர் தனக்கு சொந்தமாக இருந்த  நிலத்தை விற்று பல லட்சம் பணம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அல்லா ஹையர் வழக்கம் போல் காலை நேரத்தில் நடைபயிற்சிக்கு செல்லும்போது அதே தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.  தேசிய மயமாக்கப்பட்ட பிரபல தனியார் வங்கியின் மேலாளராக பாலகிருஷ்ணன் பணியாற்றி வந்துள்ளார்.

 

அல்லா ஹையரும், பாலகிருஷ்ணனும் நெருங்கி பழகி வந்த நிலையில் அல்லா ஹையர் தன்னுடைய குடும்ப கஷ்டங்களை அவரிடம் பகிர்ந்துள்ளார். நான் இப்போது வருமானம் இல்லாமல் தவித்து வருகிறேன். என்னுடைய நிலத்தை விற்பனை செய்த பணத்தை வைத்து என்ன தொழில் தொடங்கலாம் என்று பாலகிருஷ்ணனிடம் யோசனை கேட்டுள்ளார்.

 

அப்போது, நிலம் விற்ற பணத்தை தங்களது வங்கியில் டெபாசிட் செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவரின் ஆசை வார்த்தையை நம்பிய  அல்லா ஹையர், அவரிடம் சுமார் ரூ. 36 லட்சம் பணத்தை கொடுத்ததுடன் 50 பவுன் தங்க காசுகளையும் ஒப்படைத்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல, அல்லா ஹையருக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார்போல், வாங்கிய 36 லட்சம் பணத்தையும் 50 பவுன் தங்க காசுகளையும் திருப்பித் தராமல் மேலாளர் பாலகிருஷ்ணன் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. 

 

இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அல்லா ஹையர், பாலகிருஷ்ணன் மீது சிவகங்கை எஸ்.பி செந்தில்குமாரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்,  பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

மோடி ஆட்சியில் இதுவரை 5 லட்சம் கோடி வங்கி மோசடி- ராகுல் காந்தி!

Published on 14/02/2022 | Edited on 14/02/2022

 

rahul gandhi

 

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏபிஜி ஷிப்யார்டு (ABG Shipyard) நிறுவனம்  கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் பழுதுபார்க்கும் தொழிலில் கடந்த 16 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில் இந்நிறுவனம் 22,842 கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

 

இது நாடு முழுவதும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், ”மோடி ஆட்சியில் இதுவரை 5,35,000 கோடி ரூபாய் அளவுக்கு வங்கி மோசடிகள் நடந்துள்ளன. 75 ஆண்டுகளில் இப்படி ஒரு மோசடி நடந்ததில்லை” எனக் கூறியுள்ளார்.

 

மேலும் அவர், ”இந்த கொள்ளை மற்றும் மோசடி நிறைந்த நாட்கள், மோடியின் நண்பர்களுக்கு மட்டுமே நல்ல நாட்கள்” எனவும் கூறியுள்ளார்.