கேரளாவில் மாநில எழுத்தறிவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எந்த வயதிலும் தேர்வு எழுத விரும்புவோர், பாதியில் பள்ளி படிப்பை முடித்தவர்கள், கல்வி கற்க ஆசைப்படுபவர்கள் என இவர்களுக்காக இந்த சிறப்பு கல்வி திட்டமானது இயங்கி வருகிறது. கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பாகீரதி அம்மையார் (105). இவருக்கு 6 பிள்ளைகளும் 16 பேர பிள்ளைகளும் உள்ளனர். இவர் சிறுவயதில் பள்ளி படிப்பில் ஆர்வமிக்கவராக இருந்துள்ளார். ஆனால் தனது 9 வயதில் தனது சகோதர, சகோதரிகளை பார்த்துக் கொள்வதற்காக பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார்.
ADVERTISEMENT
இதனால் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆசை வெறும் கனவாகி போய் விட்டது. தற்போது 105 வயதாகும் பாகீரதி அம்மையார் மூன்றாம் வகுப்பில் நிறுத்திய படிப்பை தொடர முயற்சி செய்தார்.இதனால் நான்காம் வகுப்பிற்கான பாட புத்தகத்தை படித்து வந்த அவர் மாநில எழுத்தறிவு இயக்கத்தின் மூலம் கொல்லத்தில் உள்ள தன்னாட்சி கல்வி நிறுவனத்தில் தேர்வு எழுதவுள்ளார். கேரளாவில் இந்த கல்வி திட்டத்தின் மூலம் கடந்த வருடம் 96 வயதில் ஒரு மூதாட்டி எழுத்தறிவு தேர்வில் நூற்றுக்கு 98 மதிப்பெண்களை எடுத்து சாதித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments