Skip to main content

கொள்ளுப் பேரக்குழந்தைகளுடன் 105-வது பிறந்தநாளைக் கொண்டாடிய மூதாட்டி!

Published on 06/12/2020 | Edited on 06/12/2020
 Grandmother celebrating her 105th birthday with her grandchildren!

 

மகன்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன், பேத்திகளுடன் தனது 105 வது பிறந்த நாளை கொண்டாடி, சுமார் 500 பேருக்கு ஆசிர்வதித்துள்ளார் பொன்னம்மாள் பாட்டி.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள எல்.என்.புரம் ஊராட்சி அணவயல், ஜீவா நகர் துரைச்சாமி சேர்வை என்பவரின் மனைவி பொன்னம்மாள். அணவயலில் பிறந்து மலேசியாவுக்கு சென்று 13 வயதில் மீண்டும் சொந்த ஊருக்கு வந்து துரைச்சாமி சேர்வையை திருமணம் செய்து கொண்ட பொன்னம்மாளுக்கு முத்து, சண்முகம், பழனிவேல் என மூன்று மகன்கள். இவர்களுக்கு 9 பேரன் பேத்திகள். 13 கொள்ளுப் பேரன், பேத்திகள் உள்ளனர். கணவர் இறந்துவிட்ட பிறகு மகன்களுடன் வசிக்கும் பொன்னம்மாள் பாட்டிக்கு இப்போது 105 வயதாகிறது. இத்தனை வயதிலும் தனது பணிகளை தானே செய்துகொள்ளும் அளவிற்கு முழு உடல் நலத்தோடு இருக்கிறார்.

 

பாட்டியின் 105-ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட நினைத்த பேரன், பேத்திகள் சுமார் ஆயிரம் அழைப்பிதழ்கள் அச்சடித்து ஊர், உறவுகளுக்கு கொடுத்து டிசம்பர் 6-ந் தேதி பிறந்த நாள் கொண்டாடினார்கள். வந்தவர்கள் அனைவருக்கும் கல்யாணம், காதுகுத்து போல 150 கிலோ ஆட்டுக்கறியுடன் அசைவ விருந்து படைத்தனர். சுமார் 500 பேருக்கு மேல் வந்து பொன்னம்மாள் பாட்டியிடம் ஆசி பெற்றனர்.

 

 Grandmother celebrating her 105th birthday with her grandchildren!

 

காலை முதல் மாலை வரை ஓய்வின்றி அனைவருக்கும் விபூதி பூசி ஆசிர்வதித்து அனுப்பினார். பொன்னம்ம்ள் பாட்டியின் பேரன்கள் சங்கர் மற்றும் பாஸ்கர் கூறும் போது, அணவயலில் பிறந்து மலேசியா சென்று பிறகு, மீண்டும் அணவயலுக்கு வந்து திருமணம் செய்து கொண்ட பாட்டிக்கு, விவசாய வேலைகளில் உடல் உழைப்பு அதிகம். அதற்கு ஏற்ப பாரம்பரிய உணவுகளையும் சாப்பிட்டதால் தான் இத்தனை வயதிலும் திடமாக உள்ளார். மரபணு மாற்றப்பட்ட, நஞ்சில்லாத இயற்கை உணவுகளை சாப்பிட்டால் 100 வயதை கடந்தும் வாழமுடியும் என்பதற்கு எங்கள் பாட்டியே சாட்சி. இப்பொழுது உள்ள உணவுகளை சாப்பிடும் பேதுதான் நோய்கள் எல்லாம் வருகிறது. இனிமேல் ஒவ்வொரு வருடமும் பாட்டிக்கு பிறந்த நாள் கொண்டாடுவோம் என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.