ADVERTISEMENT

நக்கீரன் நியூஸ் எஃபெக்ட்!!! போலி டாக்டர்கள் மாநாடு... விசாரணையை தொடங்கிய சுகாதாரத்துறை அதிகாரிகள்!

10:04 PM Dec 05, 2018 | manosoundar


ADVERTISEMENT

"அமைச்சர் ஜெயக்குமார், எம்.பி. குமார் முன்னிலையில் ’கொலை காரர்கள்’ மாநாடு! –பேரதிர்ச்சி ரிப்போர்ட்!" என்கிற தலைப்பில் திருச்சியை சேர்ந்த கே.எஸ்.சுப்பையா- தமிழரசி போலி டாக்டர்கள் தம்பதி, நாளை (6-12- 2018) காலை 9 மணிக்கு சென்னை தி.நகர் ஆர்.கே. சாலையிலுள்ள அலமேலு மங்கா திருமணமண்டபத்தில் போலிடாக்டர்கள் மாநாட்டை நடத்த இருக்கிறார்கள் என்று நக்கீரன் இணையதளத்தில் எக்ஸ்குளுஸிவ் செய்தியாக அம்பலப்படுத்தினோம். மேலும், இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கவனத்திற்கும் கொண்டுசென்றோம். உடனடியாக விசாரணை செய்யும்படி டி.எம்.எஸ். அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். டி.எம்.எஸ். ருக்மணி தலைமையிலான அதிகாரிகள் நாளை நடக்கப்போகும் போலி டாக்டர்கள் மாநாடு குறித்து அதிரடி விசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT