இன்று அல்லது நாளை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரிக்கு பிரதமர் வந்துள்ளார். அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக இன்னும் சிறிது நேரத்தில் விவேகானந்தர் கல்லூரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இந்த ஆண்டில் மட்டும் ஐந்தாவது முறையாக தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வந்திருக்கிறார். மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பல இடங்களில் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தக்கலை அண்ணா சிலை அருகே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த், ராஜேஷ்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.