ADVERTISEMENT

சென்னையில் பல இடங்களில் ஐ.டி ரெய்டு

08:25 AM Nov 16, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் இன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை பட்டாளம், தி.நகர், வேப்பேரி, கோபாலபுரம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது. ஜவுளி நிறுவன உரிமையாளர் நீலகண்டனுக்கு சொந்தமான கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாகவும், சென்னை நுங்கம்பாக்கம் மண்ணடியில் உள்ள தொழிலதிபர் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரிலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை அதிகாரிகளின் உதவியுடன் இந்தச் சோதனையை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT